Valimigum Idam Essay

685 Words3 Pages
வலிமிகும் இடங்கள் 1. அங்குச் சென்றான் அங்கு, இங்கு, எங்கு – சொற்களுக்குப் பின் வலிமிகும் எனும் அடிப்படையில் அங்குச் சென்றான் எனும் எடுத்துக்காட்டில் அங்கு எனும் சொல்லுக்குப் பின் வருமொழியில் செ முதல் எழுத்தாக வந்திருப்பதால் ச் என்று வலிமிகுந்துள்ளது. 2. இத்துணைச் சிறிய அத்துணை, இத்துணை, எத்துணை – சொற்களுக்குப் பின் வலிமிகும் எனும் அடிப்படையில் இத்துணைச் சிறிய எனும் எடுத்துக்காட்டில் இத்துணை எனும் சொல்லுக்குப் பின் வருமொழியில் சி முதல் எழுத்தாக வந்திருப்பதால் ச் என்று வலிமிகுந்துள்ளது. 3. தங்கத் திரை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலிமிகும் எனும் அடிப்படையில் தங்கத்திரை எனும் சொல் 3-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வலிமிகுந்துள்ளது. 4. விண்ணைத் தாண்டி இரண்டாம் வேற்றுமை உருபு ஐ-க்கு பின் வலிமிகும் எனும் அடிப்படையில் விண்னைத் தாண்டி எனும் எடுத்துக்காட்டில் விண் எனும் சொல்லுடன் ஐ உருபு சேர்ந்து விண்ணை-ஆக வந்து வருமொழியில் முதல் எழுத்து தா வந்திருப்பதால் த் என்று வலிமிகுந்துள்ளது. 5. அக்கடிதம் அ, இ, எ என்னும் எழுத்தின் பின் வலிமிகும் எனும் அடிபடையில் அக்கடிதம் எனும் எடுத்துக்காட்டில் அ எனும் எழுத்துக்குப் பின் நிலைமொழியில் முதல் எழுத்து க என்று வந்திருப்பதால் க் என்று வலிமிகுந்துள்ளது. 6. அணுக்குண்டு முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும். எடுத்துக்காட்டில் அணு எனும் சொல் முற்றியலுகரச் சொல்லாகும். எனவே, அணு எனும் முற்றியலுகரச் சொல்லுக்குப் பின் நிலைமொழியில் முதல் எழுத்தாக கு வந்திருப்பதால் க் என்று வலிமிகுந்துள்ளது. 7. தேடிக்கண்டார் அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும். எடுத்துக்காட்டில் தேடி என்பது இகர ஈற்று வினையெச்சம். எனவே, தேடி என்னும் சொல்லுக்குப் பின் வருமொழி முதல் எழுத்தாக க வந்திருப்பதால் க் என்று வலிமிகுந்துள்ளது. 8. பொதுப்பணி முற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும். எடுத்துக்காட்டில் பொது எனும் சொல் முற்றியலுகரச் சொல். எனவே, பொது எனும் சொல்லுக்குப் பின் நிலைமொழியில் முதல் எழுத்தாக ப வந்திருப்பதால் ப் என்று வலிமிகுந்துள்ளது. 9. அந்தப் பெரியவர் அந்த, இந்த, எந்த – சொற்களுக்குப் பின்

    More about Valimigum Idam Essay

      Open Document